மதுரை ஆலய பிரவேசம் (ஜூலை 8, 1939)
=======================================
இன்றைய இந்துக்கள் பலருக்கு அறியப்படாத பெயர் "மதுரை. அ. வைத்தியநாத ஐயர்". இவரை பற்றிய வரலாறு கிடைப்பது என்பது மிக அரிது. இதுதான் திராவிட இயக்கங்களின் பலம் மற்றும் இந்துக்களின் பலவீனமும் ஆகும்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டம், விஷ்ணம் பேட்டையில் 1890-ம் ஆண்டு மே மாதம் 16-ம் நாள், (16-05-1890) வைத்தியநாத ஐயர் பிறந்தார். சுதந்திரப் போராட்டம் தோன்றிய காலந்தொட்டே ஒப்பற்ற பல தலைவர்கள் மதுரை மாநகரில் தேசிய இயக்கத்தை வளர்த்து வந்தனர். மகாத்மா காந்தியடிகள் 1919-ம் ஆண்டு மதுரைக்கு வருகை புரிந்தார், 1921-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் நாள் இரண்டாம் முறையாக அங்கு வந்த போது காந்தியடிகள் அரையாடை அணிந்து புரட்சியை உருவாக்கினார். பின்னர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையால் வெகுவாகக் கவரப்பட்ட இளைஞர்கள் பலர் பின்னாளில் மிகப்பெரிய தலைவர்களாகவும், சமூக சேவகர்களாகவும் விளங்கினார். அவர்களில் நமது ஐயரும் குறிப்பிடத்தக்க ஒருவர். வக்கீல் தொழிலுக்குத் தகுதியடைந்த வேளையில், மதுரையில் பிரபலமான வக்கீலாகத் திகழ்ந்த திரு. நடேச ஐயரிடம் ஜுனியராகச் சேர்ந்தார்.
ஹரிஜனங்களை சமுதாயத்தில் சரி சமானமான ஜனங்களாக ஆக்கிட வேண்டுமென்ற உள்ளுணர்வு ஆசை அய்யருக்கு வளர்பிறையாக வளர்ந்து கொண்டிருந்தது. தேசவிடுதலைப் போருக்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமத்தையும் அக்கறையையும் விட ஹரிஜன சேவைக்குத்தான் அதிகம் உழைப்பையும் பணத்தையும், காலத்தையும் செலவிட்டார். ஆனால் அது ஒட்டுமொத்த மக்களின் மாற்றமாகவும் இருக்கவேண்டும் என்றே எண்ணினார். உதாரணமாக, 1922 - 24 பெரியார் திருப்பூர் மாநாட்டில் நாடார்கள் கோவிலுக்குள் பரவேசம் செய்வதை பற்றி தீர்மானம் நிறைவேற்ற பேசியதாகவும் அதை எதிர்த்து வாக்களித்தவர்களில் ஒருவர் வைத்தியநாத ஐயர் என்றும் ஒரு செய்தி பரவப்பட்டுவருகிறது. இதில் மறைத்த செய்தி ஒன்று உண்டு, அன்று அந்த தீர்மானம் பேச்சில் மிகப்பெரிய சர்ச்சை வந்தது. அதில இராமாயணம் போன்ற இதிகாசங்களும், புராணங்களும் எரிக்கபடவேண்டும் என்கிற சர்ச்சை பேச்சுகளும் அடங்கும் அதனால் எதிர்ப்பு மட்டுமே மிஞ்சியது, இதனாலேயே
திரு. வைத்தியநாத ஐயர் எதிர்த்து வாக்களித்திருக்கவேண்டும். இதன் பின்பு சேலம் மாநாட்டிலும் இதையே பெரியார் பேசியபோது மிகப்பெரிய பிரச்சனையே உருவானது என்பது வரலாறு. மக்களின் உணர்வுகளை மாற்ற தெரியாமல் வம்படியாக செய்ய முற்பட்டு அந்த முயற்சி பலனளிக்காமலே போய்விட்டது. அதன் பின்பு அவரின் ஆதரவாளர்கள் பல கோவில்களில் நுழைய முற்பட்டபோது மக்கள்களினாலேயே அடித்து விரட்டப்பட்டனர் என்பதும் வரலாறு இத்துடன் ஆலயபிரவேசம் தொடர்பான விசயங்களுக்கு முற்றுபுள்ளியும் வைத்துவிட்டனர்.
மக்களின் ஆதரவோடு "ஆலயபிரவேசம்" நடத்திடவேண்டும் அப்படி செய்வதே இந்து மதத்தின் மறுமலர்ச்சியாக அமையும் எனும் பார்வை ஐயரிடம் இருந்தது என்பதே உண்மை. அதற்கான தருணம் 1932இல் காந்தியடிகளுக்கும், டாக்டர் அம்பேத்காருக்கும் இடையே பூனா ஒப்பந்தம் ஏற்பட்டது வைத்தியநாத ஐயருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. இதை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிறைவேற்ற தலைவர்கள் அய்யர் என்.எம்.ஆர். டாக்டர் ஜி.ராமச்சந்திரன், நாவலர் சோமசுந்தர பாரதி, முனகாலா பட்டாபிராமய்யா, சிவராமகிருஷ்ணய்யர், சோழவந்தான் சின்னச்சாமி பிள்ளை மட்டப்பாரை வெங்கட்ராமய்யர், முதலானோரும், மாணவர்களும் மதுரை நகரின் வீதிகளிலும் சந்துகளிலும் வீட்டுக்கு வீடாகவும் சென்று தீண்டாமை விலக்கு ஆலயப் பிரவேச அவசியம் பற்றி தீவிரப் பிரச்சாரம் செய்தோம். இப்படி 5 வருடம் பிரச்சாரம் நடந்தது. வைத்தியநாத ஐயரும் அவருடன் பணியாற்றியவர்களும் செய்த தீவிர பிரச்சாரத்தால் மக்களும் மனது மாறினர். அதற்கு ஆதரவும் தெரிவித்தனர். மீனாட்சி கோவில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.எஸ்.நாயுடு அவர்களும் அவரது குழுவினரும் கோவில் நுழைவுக்கு ஆதரவு காட்டினர். இதற்கிடையே அதை சட்டமாக மாற்ற் எண்ணிய ராஜாஜி அதை நிறைவேற்ற முடியாமல் தாமதம் ஏற்பட்டது. இனியும் பொறுப்பதற்கில்லை என்று அய்யர் 1939 ஜூலை8 இல் ஆலயப் பிரவேசம் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பும் வராமல் இல்லை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் ஒருவர் திரு.நடேச ஐயர், இவரிடமே ஜூனியராக திரு.வைத்தியநாத ஐயர் பணியாற்றினார் என்பது கவனிக்கப்படவேண்டியதாகும்.
இந்நிலையில் உயர்சாதி ஆதிக்கசாதியினர் ஒரு நோட்டீஸ் வெளியிட்டனர். அந்த நோட்டீஸ் “மீனாட்சிக் கோவிலுக்குள் நுழைந்தால் என்ன நடக்கும் பார்’ என்று சவால் விடப்பட்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் ஜூலை 8,1939 அன்று வைத்திய நாதய்யர் தம் வீட்டிலிருந்து பூஜை சாமான்களைத் தனது காரில் வைத்துக் கொண்டு, கக்கன், மற்றும் பல ஹரிஜனங்கள், ஒரு நாடார், தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கச் செயலாளர் எல்.என்.கோபால்சாமி, உசிலம்பட்டி வி.முத்து ஆகியவர்களுடன் கோவிலுக்கு செல்ல அங்கே நோட்டிஸ் விசயத்தை கேள்விபட்ட திரு பசும்பொன் முத்து இராமலிங்க தேவர், ஐயருக்கு ஆதரவாக களம் இறங்கினார். எல்லாரும் ஒன்று சேர்ந்து மீனாட்சி கோவில் தெற்குக்கோபுர வாசலை அடைந்தனர். அங்கே எதிர்ப்பாளர்களர்கள் எவரையும் காணவில்லை, தயாராக நின்ற அறங்காவலர் ஆர்.எஸ்.நாயுடு அனைவரையும் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றார்.முதலில் விபூதிப் பிள்ளையாரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு பொற்றாமரைக் குளத்தில் கைகால் சுத்தம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கர்ப்பக் கிரகத்திற்குச் சென்றனர். பட்டர்கள் பூஜை செய்தனர். ஹரிஜன ஆலயப்பிரவேசம் நடந்துவிட்டது என்று அம்மன் சன்னதி வாசலில் வந்து தரையில் படுத்து கும்பிட்டு, பிரகடனம் செய்தனர்.
இதைக் கண்டு வெகுண்டு எழுந்த எதிர்ப்பாளர்கள், நடேசய்யர் தலைமையில் கூடி, ஐயரையும் அவரது குடும்பத்தினரையும் சாதி விலக்கம் செய்து விட்டதாக அறிவித்தனர். தொடர்ந்து சட்டத்தை மீறி ஆலயப்பிரவேசம் செய்ததாக, அய்யர் வகையறா மீது கோர்ட்டில் பிராது தொடுத்தனர். ஆலயப்பிரவேசம் ஒரு சமூகப் பிரச்சனையைப் பெரிதாகக் கிளறி விட்டுவிடும் என்பதை அறிந்திருந்த முதன் மந்திரியான இராஜாஜி அவர்கள் தன் நண்பரை காப்பாற்றவும், இந்த சீர்திருத்தத்தை உடனடியாக சட்டமாகவும் அமல்படுத்த கவர்னர் மூலம் ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கச் செய்து முன்தேதியிட்டு ஆலயப் பிரவேசத்தைச் செல்லுபடி ஆக்கினார். [பிராது கொடுத்ததும், அதை தடுக்க அவசர சட்டம் வாங்கியதும், வழக்கு அன்று கோர்ட்டில் கலெக்டர் சென்று சட்ட தீர்மானத்தை கொடுத்ததும், வழக்கு டிஸ்மிஸ் ஆன இந்நிகழ்வும் ஒரு சுவரஸ்யமான வரலாற்று சம்பவமே ]
இவ்வாறு பல நூறாண்டு வருட தீய பழக்கம், ஜூலை 8 1939 அன்று அடிமாண்டு போகுமாறு ஐயர் செய்தார். வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் இது. மதுரையயங்கும் ஒரே பரபரப்பு. மகிழ்ச்சி ஆரவாரம் அன்று முழுவதும் பூஜைகள் ஒழுங்காக நடைபெற்றன.
[Reference:
http://maduraiavaidyanathaiyer.com/site.htm#aalayapravasam
https://raattai.wordpress.com/…/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8…/
https://www.thehindu.com/…/he-who-remove…/article4499295.ece
]
No comments:
Post a Comment